Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் சீத்தாப்பழ மர இலைகள்! எப்படி?

பழத்தின் சதைப்பகுதியை எடுத்து சாப்பிட்டு வர ரத்த விருத்தி ஏற்படும். சோகை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
சீதாப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், அதிகமாக இருப்பதால், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்கள் எலும்புகள் வலுப்படவும் உதவுகிறது.
ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்த சுத்தி ஏற்பட்டு ரத்த நாளங்களிலுள்ள கொழுப்பு பொருட்களை அடைத்துக் கொள்ளுவதைத் தடுக்கும். மாரடைப்பு வராது பாதுகாக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாபழ இலைகளுக்கு உள்ளது. சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து சீரான அளவில் வைக்க உதவுகிறது. இந்த இலைகளை 5 எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி தினமும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்கும்.
 

சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் இரண்டு சீதாப்பழம் தின்றால் மலச்சிக்கல் நீங்கும்.
 

 நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் டைப் -2 டயாப்டீஸ் நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்து உள்ளதால் இது மூச்சு குழாய்களில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பூண்டு பாலை குடிப்பதால் செரிமான சக்தியை உண்டாக்கும்! வயிற்று பூச்சி அழியும்!

tamiltips

மாத்திரை அட்டைகளில் இருக்கும் சிவப்புக் கோடு..! எதற்கு தெரியுமா?

tamiltips

அமெரிக்க ராணுவத்துக்கு புதுவகை ஹெட்செட் எதற்குத் தெரியுமா?

tamiltips

உங்கள் முகத்தை இயற்கையாகவே அழகாக்க தேன் மட்டுமே போதும்! கிரீம் வேண்டாம்!

tamiltips

கிட்டப்பார்வை,தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே இல்லை! கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு!

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? மருத்துவர் விளக்கம்!

tamiltips