Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி பகுதியை சேர்ந்தவர் இலக்கியா. இவர் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியாவின் கணவர் அரிசி ஆலை ஒன்றில் கணக்கராக பணிபுரிகிறார். 

தற்போது இலக்கியா 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். குடும்பத்தின் வறுமை காரணமாக இலக்கியாவிற்கு சீமந்தம் நடத்த முடியவில்லை. இந்த செய்தி சக பெண் காவலர்கள் மூலம், காவல் ஆய்வாளர் இளங்கோவனுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார் தங்கள் சொந்த செலவில் சீமந்தம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பெண்காவலர் இலக்கியாவுக்கு, அவருடன் பணிபுரியும் காவலர்கள், காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் தங்கள் சொந்த செலவில் சீமந்தம் நடத்தினர்.

இதனால் உணர்ச்சிவசப்பட்டு கர்ப்பிணி இலக்கியா கண்கலங்கினார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உஷார் மக்களே! நாளை மறுநாள்! 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்!

tamiltips

இந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.. மார்பக புற்றுநோய் என்னும் கொடிய நோயை தடுப்போம்!

tamiltips

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

tamiltips

தினமும் பால் யாரெல்லாம் குடிக்க வேண்டும் தெரியுமா? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

tamiltips

புயல் வேகத்தில் பரவுது பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச்… இளசுகளின் விபரீதப் போதை

tamiltips

தங்கம் விலை தாறுமாறு உயர்வு.. ஏன் தெரியுமா?

tamiltips