Tamil Tips
பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

மார்பகத்தில் பால் கட்டிவிடுதல்… வலி இல்லாத வீட்டு வைத்திய டிப்ஸ்…

மார்பகத்தில் தாய்ப்பால் கட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால், பலருக்கும் இதனால் வலி ஏற்படும். குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாமல் போகும். எனவே இதற்கான வலி இல்லாத வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் தாய்ப்பால் கட்டினாலும் அதை சரி செய்து விடலாம்.

வலி இல்லாத வீட்டு வைத்திய சிகிச்சைகள்…

இங்கு சொல்லப்படும் வைத்திய முறைகள் அனைத்தும் நல்ல பலன் தரக்கூடியவை. வலியும் இருக்காது.

விரல்களால் தடவுதல்

மார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும்.

கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.

பால் கொடுக்கும் முறை

இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும்.

Thirukkural

ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.

படுக்கும் முறை

பால் கட்டாமல் இருக்க மல்லாந்து படுக்காமல், ஒரு பக்கமாக படுக்கவும்.

ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் எளிதில் பால் கட்டிக்கொள்ளாது.

கிரீம் தடவலாமா?

கிரீம், மருந்துகள் தடவ கூடாது.

குழந்தை பால் குடிக்கும்போது, கெமிக்கல்கள் குழந்தையின் உடலில் சென்று விடும்.

blocked ducts

Image Source: the lifestyle library, mothering

வெந்நீர் ஒத்தடம்

ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.

இதையும் படிக்க: குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

ஒத்துக்கொள்ளாத உணவுகளைத் தவிர்

உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு குழந்தைக்கும் ஆகாது

உங்களுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லையோ, குமட்டல் வருகிறதோ அந்த உணவுகள் குழந்தைக்கும் தொந்தரவு தரும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.

மசாஜ்

தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

முட்டைக்கோஸ் இலைகள்

பெரிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து 2 நிமிடம் சுடுநீரில் போட்டு, அது சூடு ஆறிய பின் பிராவில் சொருகி வையுங்கள். தாய்ப்பால் கட்டுவது நிற்கும்.

உருளைக்கிழங்கு மசாஜ்

உருளைக்கிழங்கை இரண்டாக அறிந்து, ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

சில்லென்று ஆன பிறகு, உங்களுக்கு எந்த இடத்தில் தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு உருளைக்கிழங்கை வைத்து மசாஜ் செய்யுங்கள்.

மல்லிகைப்பூ விழுது

மல்லிகைப்பூவை அரைத்து மார்பகத்தில் எங்கு தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு திக்கான பேக்காக போடலாம்.

தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும். இதை அடிக்கடி போட்டால் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். எனவே, தேவையானபோது போடலாம்.

ஐஸ் கட்டி ஒத்தடம்

ஐஸ் கட்டியை எடுத்து மார்பகத்தில் மிதமாகத் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும்.

டர்க்கி டவல்

சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்து, பிழியவும்.

இளஞ்சூடாக மார்பகங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

அவல்

அவலை சூடான தண்ணீரில் நனைத்து மார்பகத்தில் கட்டி விட்டாலும் தாய்ப்பால் கட்டி கொள்வது சரியாகும்.

அக்குபஞ்சர்

அருகில் உள்ள அக்குபஞ்சர் நிபுணரிடம் சென்று நீடில் போட்டுக் கொள்ளலாம்.

தாய்ப்பால் கட்டிக் கொள்வது சரியாகிவிடும்.

அக்குபிரஷர்

acupressure point for blocked ducts

உள்ளங்கையில், கட்டைவிரலுக்கு கீழே உள்ள பகுதியில் 10 நிமிடங்களுக்கு மிதமாக அழுத்தம் கொடுத்து வந்தாலும் தாய்ப்பால் கட்டுவது சரியாகிவிடும்.

அரிசி ஒத்தடம்

அரிசியை துணியில் முடித்து, தோசை தவாவில் வைத்து சூடேற்றவும்.

இளஞ்சூடாக மார்பகத்தில் வைத்து மசாஜ் செய்த பிறகு, தாய்ப்பாலை குழந்தைக்கு தரலாம்.

இதனால் தாய்ப்பால் கட்டி இருப்பதும் சரியாகும். குழந்தைக்கு தேவையான பாலும் சீராக கிடைக்கும்.

கிரீன் டீ பேக்

கிரீன் டீ குடித்து வந்தால் அந்த பேக்கை தூக்கி எறிய வேண்டாம்.

அதை வெந்நீரில் 10 நிமிடம் போட்டு வையுங்கள். பின்னர் இளஞ்சூடாக மாறிய பின் மார்பகங்களில் தடவி வர தாய்ப்பால் கட்டி இருப்பது நீங்கும்.

இதையும் படிக்க: தாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? தீர்வு என்ன?

எப்சம் உப்பு குளியல்

தினமும் குளிக்கும்போது, ஒரு டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து இளஞ்சூடாக குளித்து வந்தால் தாய்ப்பால் மார்பகத்தில் கட்டாது.

அன்னாசி ஜூஸ்

அரை டம்ளர் அன்னாசி ஜூஸ் அல்லது 2 துண்டு அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் கட்டிக்கொள்ளாது.

விட்டமின் சி உணவுகள்

ஆரஞ்சு, சாத்துகுடி, எலுமிச்சை ஜூஸ், தக்காளி, கிவி, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கட்டாது.

பால் கொடுத்தல்

குழந்தையின் 1 ½ – 2 வயது வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தாலே தாய்ப்பால் கட்டிக்கொள்ளாது.

இதையும் படிக்க: தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும் இயற்கை வழிகள்… மல்லிப்பூ வைத்தியம் பலன் தருமா? டிப்ஸ்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் வலிப்பு வருமா? வலிப்பு வராமல் தடுப்பது எப்படி?

tamiltips

குழந்தைகளின் சருமப் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும்…

tamiltips

பன்றி காய்ச்சல் அறிகுறிகள், வராமல் தடுக்கும் வழிகள்?

tamiltips

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

tamiltips

குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

tamiltips

குக்கரில் செய்யக்கூடிய 3 வகை ஹோம்மேட் பிஸ்கெட் ரெசிபி…

tamiltips