Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நாள் முழுதும் உட்காந்துக்கொண்டே வேலைபார்ப்பதால் உங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலையா?

உங்களுக்கு முதுகு வலி, அஜீரண கோளாறு, உடல் பருமன், தசைப்பிடிப்பு, டென்சன் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.எனவே, இத்தகைய நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்…

காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் பணியை துவங்கும் முன் ஒரு நிமிடம் கண்ணை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள், அதன் பிறகு வேலையை தொடங்கினால் பணியினால் ஏற்படும் பதற்றம் குறைவதோடு மட்டுமல்லாமல், பிரெஷ்ஷாக உணர்வீர்கள்.

கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.

உட்காருவதற்கு நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

மேலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது… என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும்.

Thirukkural

இதை தவிர்க்க சோர்வாக தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம்.

உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பனியால் சளி, இருமலா? கை வைத்தியம் இருக்க கவலை எதற்கு?

tamiltips

உருளைக்கிழங்கு மசாலா பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதுவும் அதை போண்டாவாகச் செய்தால் கேட்க வேண்டுமா?

tamiltips

சர்க்கரை வியாதி இருந்தால் என்ன தான் சாப்பிடுவது? பேரிச்சம் பழம் கூட சாப்பிடக்கூடாதா?

tamiltips

கர்ப்பிணிகளுக்கு நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நீரிழிவு உண்டாகுமா?

tamiltips

வெங்காயம் இல்லாமல் வத்தக்குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips