Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கல்யாணம் மற்றும் விஷேசங்களில் செய்யப்படும் கதம்ப சாம்பாரின் ரகசியம் இதுதாங்க!

இன்று நாம் பார்க்கும் இந்த அரைத்துவிட்ட கதம்ப சாம்பாரானது நம் வீட்டு விசேஷங்களில் அதாவது பூஜைகளில், சமாராதனைகளில் அல்லது விருந்தினர்கள் வருகை, சின்ன பங்ஷன்களில் செய்யக்கூடியது.

தேவையான பொருட்கள் :-

– 2 1/2 ஸ்பூன் தனியா

– 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு

– 1/2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு

Thirukkural

– 5 காய்ந்த மிளகாய்

– 1/4 டீஸ்பூன் வெந்தயம்

வெறும் வாணலியில் முதலில் பருப்புக்களைப் போட்டு, பாதி வறுபட்டவுடன், மீதி சாமான்களை போட்டு, பருப்பு சிவந்தவுடன் எடுத்து, ஆறவைத்து, லேஸ் ரவை பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

– 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் (மிக்ஸியில் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்)

– 5 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு (நன்கு குழைய வேகவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்)

– சிறு எலுமிச்சை அளவு புளி – (3 டம்ளர் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்)

காய்கறி :- 1/2 குடைமிளகாய், 2 அவரைக்காய், 5 பரங்கித்துண்டு, 2 வெண்டைக்காய், 5 துண்டு முருங்கைக்காய், கறிவேப்பிலை.

தாளிக்க :- எண்ணெய் கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை.

செய்முறை :- * வாணலியில் புளித்தண்ணீரை வைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், காய்களை போட்டு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டு மிதமான தீயில் மூடி வேக விடவும். காய்கள் வெந்தவுடன் கரைத்து வைத்த பருப்பை ஊற்றி இரண்டைரை ஸ்பூன் அரைத்து வைத்த சாம்பார் பொடியை கொஞ்சம் நீரில் கலந்து கொதிக்கும் சாம்பாரில் கொட்டவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்த தேங்காயை போட்டு, கலக்கி உப்பு, காரம், புளி சரிபார்த்து மேலும் ஒரு கொதிவிட்டு கேஸை அணைக்கவும்.

ஒரு தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் விட்டு மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

இப்போது கமகமக்கும் சுவையான வீட்டு விசேஷங்களில் செய்யும் அரைத்துவிட்ட கதம்ப சாம்பார் தயார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தலைவலியை நொடியில் போக்குமே சுக்கு !!

tamiltips

ஒரு ஆவாரம் பூ செடியை வீட்டில் வையுங்க, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் இத்தனை நன்மைகள் தரும்!

tamiltips

ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!

tamiltips

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 21 வயது இளம் பெண்! பேஸ்புக் அதிபரையும் பின்னுக்கு தள்ளினார்!

tamiltips

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

tamiltips