Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மருதாணி இலையை அரைத்து பெண்கள் வைத்துக்கொண்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்!

மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும். இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும் ,மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும். மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.

இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்தி, தலையில் தடவி வர இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும். மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 

1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும். மருதாணி இலையை அரைத்து, உள்ளங்காலில் வைக்க வேண்டும். அப்போது, கால் நரம்புகளில் மசாஜ் செய்தது போல், உடலின் அனைத்து பாகங்களும் புத்துணர்வடையும். மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெண்புள்ளி, தேமலுக்கு சுரைக்காய் சாப்பிட்டால் நல்ல மாற்றம் தெரியும் !!

tamiltips

அதிசயம் ஆனால் உண்மை! முதல் பிரசவம் முடிந்த 26 நாட்களில் இளம் பெண்ணுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது!

tamiltips

அடுக்கு தும்மலால் அவதியா? உடனே குணமாக்கும் சில அற்புதமான பாட்டி வைத்தியம்!

tamiltips

காலை எழுதவுடன் காபி அல்லது டீ கண்டிப்பா குடிக்க கூடாதாம்! ஏன்?

tamiltips

ஒவ்வொரு கர்ப்பிணியும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியது இது தான்!

tamiltips

சிறுநீரக கல்லை கரைக்க சித்தர்கள் சொன்ன ஆனைநெருஞ்சி முள் வைத்தியம்!

tamiltips