Tamil Tips

Tag : life style

லைஃப் ஸ்டைல்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா? எப்படி?

tamiltips
உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு!  இதயத்துடிப்பை சாதாரண...
லைஃப் ஸ்டைல்

புருவத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் தெரியுமா?

tamiltips
பெரும்பாலான பெண்களின் அழகுக்கு காரணமாகவும், அழகின்மைக்கு காரணமாகவும் இருப்பது இந்த புருவங்கள்தான். அதனால்தான் சிலரது முகத்தில் விழிகளும் மூக்கும் இதழ்களும் பிரமாதமாய் அமைந்திருந்தாலும் ‘ஏதோ ஒன்று’ குறைவது போல் தோன்றும். புருவத்தை சரியாக அலங்கரிக்கப்பட வேண்டியது மிக அவசியம். முறையாக அலங்கரிக்கப்படாத புருவமும் அழகை மோசமாகவே காட்டும். அடர்த்தியாகத் தொடங்கி, கத்தி மாதிரி முடியும் புருவம் ஒரு பெண்ணுக்கு அழகாக இருந்தது. அதைப் பார்த்த அவள் தோழிகளும் அப்படியே அமைத்துக் கொண்டார்கள். ஆனால் முதலாமவருக்குக் கிடைத்த பாராட்டு மற்ற யாருக்கும் கிடைக்கவில்லை. ஏன்? அவளது முகத்தோற்றத்துக்குப் பொருந்திவிட்ட புருவ அமைப்பு மற்றவர்கள் முகத் தோற்றத்துக்கு ஏற்றதாக இல்லை. ஒவ்வொருவரின் முகத்துக்கும் ஏற்ப புருவ அலங்காரமும் மிகச்சரியாக இருக்க வேண்டும்....
லைஃப் ஸ்டைல்

நேரத்துக்கு ஏற்ப எப்படி அலங்காரம் செய்யவேண்டும் என்று என்று தெரியுமா?

tamiltips
முதலில் அணிகலன்கள் என்பனவற்றைப் பார்க்கலாம். சிலருக்கு எந்த அணிகலனும் அணியாமல் இருந்தாலே  அழகாக இருப்பார்கள். அதனால் அணிகலன்கள் அழகுக்கு அத்தனை முக்கியமானவை அல்ல என்றாலும்,  ஆடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகைகளை அணிந்து கொண்டால்தான் அழகாக  இருக்கும்.   பட்டுப்புடவை கட்டி, புதுமையான தலை அலங்காரம் செய்து நகைகள் அணியாமல் இருந்தால், அத்தனை  அழகும் பாழாகி விடும். அதனால் கற்களால், முத்துக்களால், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றால்  அழகு கிடைக்கலாம். ஆனால் அதற்கேற்ற விழாக்கள், உடைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகை அணிய  வேண்டும் என்பதுதான் முக்கியம்.   நிறைய நகைகள் இருக்கின்றன என்பதற்காக இருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்வது  அழகுக்கு இலக்கணமல்ல. ஏனென்றால் இப்போது திருமணங்களுக்குகூட குறைவான நகைகள் அணிவதுதான்  ஃபேஷன்.   அதேபோன்றுகுளித்து முடித்து அலங்காரம் செய்யும் நேரத்தில் கண்ணாடியின் முன் உட்கார்ந்து கொண்டு  என்ன உடை அணிவது, என்ன நகை அணிவது என்று யோசிப்பவர்கள்தான் அதிகம். இதுதான் பல்வேறு  அழகின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது.   ஆம், முதல் நாள் இரவே, செல்ல வேண்டிய இடம், நேரம், அங்கே இருக்க ஆகும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து  அதற்கேற்ப ஆடைகளையும், அணிய வேண்டிய நகைகளையும் எடுத்து வைத்துவிட வேண்டும், குறைந்தபட்சம்  மனதிலாவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உடை, நகை மட்டுமின்றி போடவேண்டிய ஹேண்ட் பாக்,  செருப்பு, பூ, பொட்டு போன்றவற்றையும் முன்னரே தீர்மானித்து விட்டால், அலங்காரத்திற்கு கூடுதல் நேரம்  எடுத்துக் கொள்ள முடியும்....