Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அளவுக்கதிகமா வியர்க்கிறதா! அதுக்கு இதுதான் காரணம்!

வியர்வை வெளிப்படுவது என்பது ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வு தான். இந்த வியர்வை ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன. லருக்கு மற்றவர்களை விட அதிகப்படியான வியர்வை வெளியேற உடல் வெப்பநிலை அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள், அடிப்பாதங்கள், உள்ளங்கை மற்றும் நெற்றியில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தால் இங்கு அதிகமாக வியர்வை சுரக்கிறது.

மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக கை, கால் போன்ற பகுதிகளில் அதிகளவு வியர்வையை சுரக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் மணம் எதுவும் இருப்பதில்லை. ரத்தத்திலுள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்திய பின்னரே துர்நாற்றம் உண்டாகிறது. வியர்வையை குளிப்பதன் மூலம், கை கால்களை கழுவுவதன் மூலம் முறையாக அகற்றவேண்டும். இதற்காகவே இருக்கும் சில பிரத்யேக சிகிச்சைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடுத்த 3 நாள்! மிகவும் கவனம் தேவை! வானிலை மையம் எச்சரிக்கை!

tamiltips

மீண்டும் ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! குடும்பத் தலைவிகள் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஷாக்!

tamiltips

வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காயின் சிறப்புகள்

tamiltips

ஏறிக்கொண்டே போன தங்கம் விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக. சரிவு… எவ்வளவுன்னு தெரியுமா?

tamiltips

எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

tamiltips

உடலுக்கு ஏற்றது புளிக்கும் திராட்சையா அல்லது இனிக்கும் திராட்சையா?

tamiltips