நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
![](https://tamiltips.in/wp-content/uploads/2022/10/FB_IMG_1665330293415.jpg)
![](https://tamiltips.in/wp-content/uploads/2022/10/FB_IMG_1665330295435.jpg)
![](https://tamiltips.in/wp-content/uploads/2022/10/FB_IMG_1665330297884-683x1024.jpg)
![](https://tamiltips.in/wp-content/uploads/2022/10/FB_IMG_1665330300139-1024x615.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதுகுறித்த டாக்குமெண்ட்ரியை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி உள்ளார்.
நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.இது குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில், “நயனும், நானும் பெற்றோர் ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளுடன் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.
எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் எங்களிடம் வந்துடைந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவை பார்த்து திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் செப்டெமபர் கடைசி வாரமே குழந்தைகளை பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.