Tamil Tips
லைஃப் ஸ்டைல்

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 2

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும். சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது. மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த  தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சியோமியின் முதல் 5G ஸ்மார்ட்ஃபோன். அதிரவைக்கும் விலையில்!

tamiltips

கொரோனாவை விரட்டி அடிக்க நாம் சாப்பிட வேண்டிய பழங்கள், காய்கறிகள்! பிரபல ஹாஸ்பிடல் வெளியிட்ட பட்டியல்!

tamiltips

பித்தவெடிப்பு பாடாய் படுத்துகிறதா?? இதோ சுலப டிப்ஸ் !!

tamiltips

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது!

tamiltips

உங்க பாடி மாஸ் இண்டெக்ஸ் தெரியுமா?! ஆரோக்கிய ஜாதகத்தைப் புட்டுபுட்டு வைத்துவிடும்.

tamiltips

பின்னழகில் நறுக் என ஒரு கடி! பன்றித் தீவில் மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்!

tamiltips