Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தையை எப்படி தூக்குவீங்க? – குழந்தைக்கு பாதுகாப்பான தூக்கம் கிடைக்கிறதா? – டார்டிகோலிஸ் அப்படின்னா என்ன தெரியுமா?

·        
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். அதனால் குழந்தையை  சரியாகத் தூக்கவில்லை என்றால் சுளுக்கு
ஏற்படலாம்.

·        
கழுத்து சுளுக்கும்போது குழந்தைக்கு அதிகமான வலி ஏற்படும்.
இதற்கு சுயமருத்துவம் செய்வதாலும் அதிக வலி உண்டாகலாம்.

·        
அதனால் கைகளை போதுமான அளவுக்கு அகட்டிவைத்து, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.

·        
குழந்தையை படுக்க வைக்கும் போதும், தூக்கும்போதும் தலையையும், கழுத்துப் பகுதியையும் ஒன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

குழந்தையின் அவயங்களை  பஞ்சு போல் மென்மையாகக் கையாள வேண்டும். முடிந்தவரை நிறையபேர் கைகளில் குழந்தையை கொடுப்பதை
தடுக்கவேண்டும்.

Thirukkural



குழந்தைக்கு பாதுகாப்பான
தூக்கம் கிடைக்கிறதா?

இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடம் தாயின் மடி என்பார்கள்.
முழு நேரமும் தாய் மடியில் ஏந்தியிருக்க முடியாது என்பதால், பாதுகாப்பாக தாய்க்கு
அருகே பிள்ளையை படுக்கவைப்பதுதான் ஏற்றது.

·        
நன்றாக காற்று வரும் என்று காற்றாடிக்கு நேர் கீழாக
குழந்தையை படுக்கவைக்கக் கூடாது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகலாம்.

·        
தொட்டில் அதிக உயரத்தில் கட்டக்கூடாது. தரையில் இருந்து ஒரு
அடி உயரம் இருந்தாலே போதும்.

·        
ஜன்னல் அல்லது கதவு வழியே சூரிய ஒளி அல்லது விளக்கின் ஒளி
நேரடியாக குழந்தையின் மீது படக்கூடாது.

·        
குழந்தையை ஒரே இடத்தில் படுக்கவைத்தால், உடல் உஷ்ணம் அடையலாம்
என்பதால் அவ்வப்போது மாற்றி படுக்கவைக்க வேண்டும்.

எப்போதும் குழந்தை தூங்கும்வரையிலும் தாயின் அரவணைப்பில் இருப்பது
மிகவும் நல்லது. பாதுகாப்பான தூக்கத்தை குழந்தை உணர்ந்தபின்னரே தனியே படுக்கவைக்க
வேண்டும்.



  டார்டிகோலிஸ் அப்படின்னா என்ன
தெரியுமா?

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்து அல்லது தாடையில் பிடிப்பு
அல்லது அழுத்தம் போன்ற பிரச்னையால் வலி உண்டாவதை டார்டிகோலிஸ் என்று சொல்வார்கள்.
இதனை நிச்சயம் குணப்படுத்த முடியும் என்பதால் பயப்படுவதற்கு அவசியம் இல்லை.

·        
குழந்தைகள் வசதியாக படுக்காத நிலை, சரியாக தூக்காத காரணம்,
தவறி விழுதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்னை உண்டாகலாம்.

·        
இதனால் பாதிக்கப்படும் குழந்தைக்கு தலை ஒரு பக்கமாக சாய்ந்து
இருக்கும், இரண்டு கண்களும் வெவ்வேறு திசையில் பார்க்கலாம்.

·        
இதுபோன்ற பிரச்னை ஏற்படும்போது சுயமருத்துவமாக சுளுக்கு
எடுக்க முயற்சி செய்வது ஆபத்தாக முடியும்.

·        
பிரச்னை தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகி, பிரச்னையின்
தீவிரத்தை அறிந்து சிகிச்சையைத் தொடங்கவேண்டும்.

இந்த டார்டிகோலிஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழக்கம்போல்
பால் கொடுத்துவரலாம். குணமடைந்த பிறகு மீண்டும் இந்த பிரச்னை ஏற்படுமோ என்று
அச்சப்படத் தேவையில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்க விலை!!! கடும் அதிர்ச்சியில் மக்கள்

tamiltips

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

tamiltips

குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை அவசியமா ??

tamiltips

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது மருத்துவ மூட நம்பிக்கையா..?

tamiltips

இந்த ஹானர் செல்போனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.4 லட்சமாம்! செம தரமான காரணம்!

tamiltips

சென்னையில் ஆர்டர் – ராஜஸ்தானில் இருந்து டெலிவரிக்கு புறப்பட்ட ஸ்விக்கி பாய்!

tamiltips