Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சுவையான முலாம்பழத்தை ஜூஸ் போட்டு குடிங்க! உங்க உடலில் அத்தனை நன்மைகள் செய்யும்!

முலாம் பழத்தில் உள்ள அடினோசைன் இரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுக்கின்றது. இதனால், மாரடைப்பும், இதய நோய்களும் வராமல் காக்கின்றது.

முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், இது செரிமானத்தன்மை நிறைந்தது. அதனால், அஜீரனம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ஜீரனத்திற்கு இடையூறு விளைவிக்கும் அமிலத்தன்மையை அகற்றுகிறது.

பழச்சதையை சீரகம், இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்று கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும். சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிருணிப்பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

முலாம் பழத்தில் சிறுநீர் பிரிப்புத் தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும், எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிட்டால், கீல்வாதத்தையும் குணப்படுத்தும்.

முலாம் பழ ஜூஸில் பொட்டாசியம் உள்ளது. இது இதயத் துடிப்பை இயல்பாக்கி, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச்சோர்வைக் குறைக்கும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தொட்டாற் சிணுங்கி செடி பார்க்க மட்டும் ஆச்சர்யமில்லை அது தரும் பயன்களும் ஆச்சர்யம்! மனோசக்தி தரும் செடி!

tamiltips

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

tamiltips

மாதவிலக்கு வலி நீக்கும் வாழைப்பூ !!

tamiltips

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

tamiltips

வெறும் 650 கிராம் எடையில் பிறந்த குழந்தை! போராடிய டாக்டர்கள்! பிறகு நேர்ந்த அற்புதம்!

tamiltips

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை எல்லாம் தேவைதானா?

tamiltips