Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயை குணமாக்கும் எருக்க இலை காலணி வைத்தியம்..! வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

தற்போதைய காலத்தில் யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அனைத்து சம்பந்தமான விஷயங்களும் பகிரப்பட்டு வருகின்றன. அதுபோன்று சிலர் சித்த மருத்துவத்திற்கான அறிவுரைகளையும் பரப்பிவிட்டு செல்கின்றனர். அதையும் நம் மக்களில் சிலர் உண்மையா, பொய்யா என்ற ஆராயாமல் செயல்படுத்தி பார்க்கின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.

சமீபத்தில் டிக்டாக்கில் எருக்க இலைகளை காலணிகளுக்கு அடியே வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நடந்தால் கால் எரிச்சல் குறைந்துவிடும் என்றும் சர்க்கரை நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிவிடும் என்றும் நபரொருவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில் நமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஒரு பிரபல சித்த மருத்துவரை அணுகினோம்.

அவரிடம் கேட்டபோது இவற்றில் பெரும்பாலானவை சுய கருத்துக்களே என்று கூறி நம்மை அதிர வைத்தார். அதாவது, “எருக்க இலை மருத்துவ குணம் நிறைந்தது தான். இருக்கையிலேயே எண்ணெயாக்கி, செங்கல்லை சுடவைத்து அதன்மீது இலைகளை போட்டு காலை வைத்து வைத்து எடுத்தால் கால் எரிச்சலிலிருந்து விடுபடமுன்னேற்றம் ஏற்படும்.

ஆனால் அந்த வீடியோவை காண்பித்து இதுபோன்று வெறும் இலைகளை காலனிக்குள் சொருகி கொண்டு நடந்தால் எந்தவித பயனும் இருக்காது. மேலும் நிச்சயமாக எருக்க இலைக்கும் சர்க்கரை நோய்க்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதேபோன்று கல்லுப்பு மாரடைப்பைத் தடுக்கும் என்று வெளியாகிவரும் மருத்துவ வீடியோவானது முற்றிலும் அபத்தமானது.

சமூக வலைத்தளங்களில் தற்போதெல்லாம் பலரும் தங்களுக்கு வேண்டிய மருத்துவ அறிவுரைகளை அள்ளி தெளித்துவிட்டு செல்கின்றனர். நிச்சயமாக நம்முடைய மக்கள் அவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையேல் ஒன்று வீண் முயற்சி என்ற ரீதியில் சிக்கிக்கொள்ளும், இல்லையென்றால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும்.

Thirukkural

இறுதியாக நோயாளிகளின் விவரங்களை பாதுகாத்து மருத்துவம் அளிப்பதே மருத்துவர்களின் முதன்மையாகும். ஆனால் அவர்களை வைத்துக்கொண்டு விளம்பரம் செய்து நோயாளிகளை திரட்டி வருபவர்களின் போலிகளே” என்று தன்னுடைய ஆதங்கங்களை கூறியுள்ளார். இனியாவது இதுபோன்ற வீடியோக்களை நம்பாமல் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செயல்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

tamiltips

கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

tamiltips

கொடூர வறட்சி! மண்ணை சாப்பிடும் மக்கள்! அதிர வைக்கும் சம்பவம்!

tamiltips

முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி பிரச்சனையிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு இது ஒரு அறிய மருந்து!

tamiltips

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips

பெண்களை திருப்திபடுத்த ஆண்கள் வயாகரா பயன்படுத்தலாமா? கிளுகிளு ரிப்போர்ட்!

tamiltips