Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குதிரையில் ஏறி புயல் போல் பள்ளிக்கூடத்திற்கு பறந்த 10ம் வகுப்பு மாணவி! அசர வைக்கும் காரணம்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர்தான் இவ்வாறு செய்துள்ளார். பரீட்சைக்கு தாமதாகிவிட்டதை உணர்ந்த அவர், வேறு எந்த வழியுமின்றி, குதிரையிலேயே தனது பள்ளிக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். உடனடியாக, மறு யோசனையின்றி, குதிரையில் ஏறி, பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்ற அவர், உரிய நேரத்திற்குள் சென்று, நிம்மதியாக பரீட்சை எழுதியுள்ளார். 

அவரது வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும்போது, அம்மாணவி குதிரையேற்றத்தில் நல்ல பயிற்சி உள்ளவர் என தெரிகிறது. குதிரையை தவிர வேறு யாரும் அந்த நேரத்தில் உதவ முடியாது என நினைத்ததால், இம்முடிவை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவை, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். இதனை தனது பிடித்தமான வீடியோவாகச் சேமித்து வைக்க உள்ளதாக, ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? இதை மட்டும் உதாசீனப்படுத்தாதீர்கள்

tamiltips

ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

tamiltips

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

tamiltips

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

tamiltips

விருந்துக்கேற்றதும் சுலபமாக செய்யக்கூடியதும் ஆன இந்த வித்தியாசமான போண்டாவை செய்து பாருங்கள்!!!

tamiltips

மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதையெல்லாம் சாப்பிடுங்க சீக்கிரம் குணமாகும்!

tamiltips