Tamil Tips
லைஃப் ஸ்டைல்

திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

சாமியார் பட்டியை சேர்ந்தவர் சதுரமகாலிங்கம். இவர் தனது வீட்டில்
நாட்டு ரக பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு ஆண்டாள் என்று அவர் பெயர்
சூட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆண்டாள் குட்டி ஈன்றுள்ளது. குட்டிகள்
அனைத்தும் அழகாக இருந்த நிலையில் அந்தப்பக்கம் வந்தவர்கள் ஆளுக்கு ஒரு குட்டியாக தூக்கிச்
சென்றுள்ளனர்.

குட்டிகளை இழந்த ஆண்டாள் சோகமாக சுற்றி வந்துள்ளது. இந்த
நிலையில் சதுர மகாலிங்கம் வீட்டில் வளர்த்து வந்த ஆடு ஒன்றும் மூன்று குட்டிகளை ஈன்றது.
அத்துடன் திடிரென அந்த ஆடு இறந்துவிட்டது. இதனால் தாய்ப்பால் இல்லாமல் குட்டிகள் மூன்றும்
பரிதவித்து வந்தன.

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தாயை இழந்து தவித்த
மூன்று குட்டிகளையும் தனது குட்டியாக பாவிக்கத் தொடங்கியது ஆண்டாள் நாய். அதுமட்டும்
இல்லாமல் குட்டி ஆடுகளுக்கு பாலும் புகட்ட ஆரம்பித்தது.

விரும்பிய போதெல்லாம் ஆட்டுக் குட்டிகள் ஆண்டாள் நாயிடம்
சென்று பால் குடிக்க ஆரம்பித்தன. இந்த தகவல் அறிந்து அந்த வழியாக செல்பவர்கள் அனைவரும்
வந்து ஆண்டாள் நாயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Thirukkural

தாய்ப்பாசம் என்பது இனத்தை தாண்டியும் பலமானது என்பதை திண்டுக்கல்
ஆண்டாள் நாய் நிரூபித்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தங்கம் விலை தாறுமாறு உயர்வு.. ஏன் தெரியுமா?

tamiltips

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

tamiltips

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

tamiltips

10 மாவட்டத்தில் வெயில் பட்டையை கிளப்பும்! அனல் காற்று வீசும்! பீதி கிளப்பும் வானிலை மையம்!

tamiltips

அம்பானி மகள் திருமணம்! ரஜினிக்கு மட்டும் வந்த ஸ்பெசல் இன்விடேசன்!

tamiltips

பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

tamiltips