Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெற்றோர்கள் குழந்தைக்கு தனியறை கொடுத்து வளர்க்கும் இந்த நாகரிகம் சரியானதா?

குழந்தைகளுடன் பெற்றோர்கள் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும்.குழந்தை தன் பிரச்சனைகள் குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்குப் பிரச்சனை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான்  இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள்  அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும், ‘பாதுகாப்பு  உணர்வுடன்’ இருக்க வேண்டும். 

பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் வழி தவறலாம். அதிலிருந்து அவர்களை மீட்டு, சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கமகம சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யுங்கள்! இன்னும் சில சுவையான சமையல் குறிப்புகள்!

tamiltips

ஒரே ஜாதிக்குள் திருமணம்! ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு அதிர வைக்கும் காரணம்!

tamiltips

மீண்டும் வருகிறார் டிராகன் இளவரசி..! கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

tamiltips

காரமாக சாப்பிட்டால் என்னவாகும்? கார சுவை நம் உடலுக்குத் தேவையா?

tamiltips

ஃபாஸ்ட் ஃபுட் ரசிகரா நீங்க..? ஆண்மைக்கு ஆபத்து காத்திருக்கு !!

tamiltips

சருமம் எப்படியிருந்தால் அழகு என்று தெரியுமா?

tamiltips