Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மிரட்டும் புயல்! 30ந் தேதி கொட்டப் போகுது கனமழை! மீட்பு குழுக்கள் தயார்!

சென்னை – வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சென்னையில் இருந்து 1600 கிலோமீட்டர் தொலைவில் தற்பொழுது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதனை தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் எனவும் அவர் கூறினார். மேலும், இதன் காரணமாக மீன்வர்கள் 25,26 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் 27,28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் 30 மற்றும் 1ஆம் தேதி அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது., இந்திய வானிலை ஆய்வுமையம் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளது, ரெட் அலார்ட் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை இது ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்பதை குறிப்பதாகும்., 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

tamiltips

கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

tamiltips

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

tamiltips

பித்தவெடிப்பு பாடாய் படுத்துகிறதா?? இதோ சுலப டிப்ஸ் !!

tamiltips

முடி உதிர்வை தடுக்க முடியலையா? கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

tamiltips