Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

ஒருதலையாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், தனது காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே, இதன்பேரில், நீதிபதி என்.வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. முடிவாக, அந்த இளைஞருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிபதி, அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கும்படியும் அறிவுறுத்தினார். 

இதுதவிர, அவர் மேலும் கூறியதாவது: தன்னை காதலிக்கும்படி பெண்களை வலியுறுத்த ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை. பெண் என்பவர் தனது விருப்பங்களுக்கு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகும். இதுதவிர, பெண்கள் மற்றவர்களுடன் பழகும் முறைகளும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என ஆண்களை தூண்டுகிறது. 

இருந்தாலும், ஆசை காரணமாக, பெண்களை கத்தியால் குத்தும் அளவுக்குச் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற ஒருதலைக் காதல் வழக்குகளில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குற்றவாளிகளுக்கு அனுதாபம் காட்டுவதையும், ஜாமீன் வழங்குவதையும் நீதிமன்றங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு நீதிபதி என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை எல்லாம் தேவைதானா?

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

tamiltips

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

tamiltips

டுவின்ஸ் தெரியும்.. ட்ரிப்ளெட்ஸ், குவாட்ரெப்ளட்ஸ் தெரியுமா ??

tamiltips

நீங்கள் என்றென்றும் இளமையாக வாழ ஆசையா? இந்த ஒரு உணவால் அது சாத்தியம்!

tamiltips

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கணும்னா மரவள்ளி கிழங்கு சாப்பிடணும்! ஏன்?

tamiltips