Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

ஒருதலையாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், தனது காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே, இதன்பேரில், நீதிபதி என்.வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. முடிவாக, அந்த இளைஞருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிபதி, அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கும்படியும் அறிவுறுத்தினார். 

இதுதவிர, அவர் மேலும் கூறியதாவது: தன்னை காதலிக்கும்படி பெண்களை வலியுறுத்த ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை. பெண் என்பவர் தனது விருப்பங்களுக்கு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகும். இதுதவிர, பெண்கள் மற்றவர்களுடன் பழகும் முறைகளும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என ஆண்களை தூண்டுகிறது. 

இருந்தாலும், ஆசை காரணமாக, பெண்களை கத்தியால் குத்தும் அளவுக்குச் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற ஒருதலைக் காதல் வழக்குகளில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குற்றவாளிகளுக்கு அனுதாபம் காட்டுவதையும், ஜாமீன் வழங்குவதையும் நீதிமன்றங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு நீதிபதி என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவத்திற்கு பிறகும் பெண்ணுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்னு தெரியுமா ???

tamiltips

உங்களுக்கு தோல் உரிகிறதா? நீங்கள் வளர்கிறீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?

tamiltips

மல்லிகைப்பூ இட்லி… வாடிப்போகாத காயகறிகள்..! சூப்பர் கிச்சன் டிப்ஸ்!

tamiltips

குடை மிளகாய் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிக்குமா… நிக்காதா?

tamiltips

உங்கள் குழந்தைக்கு பரீட்சை நேரமா? பெற்றவர்கள் செய்யவேண்டிய கடமை என்ன தெரியுமா??

tamiltips

தாம்பத்ய உறவுக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்! ஏன், எதற்கு, எப்படி தெரியுமா?

tamiltips