Tamil Tips
லைஃப் ஸ்டைல்

திடீரென தந்தை மரணம்! இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் பொதுத் தேர்வு எழுதிய மாணவி! நெகிழ வைக்கும் காரணம்!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. திருச்செந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஐயப்பன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தந்தையின் இழப்பு மனதை பாதித்தாலும் ஜெயஸ்ரீயின் லட்சிய உறுதியை பாதிக்கவில்லை. தான் கணினி துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது தந்தையின் லட்சியக் கனவும் என்றும் அதனை நிறைவேற்ற உறுதியுடன் படித்துவந்ததாகவும் கூறுகிறார் ஜெயஸ்ரீ.

ஐயப்பனின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. ஆனால் அதனைக் கருதி முன்வைத்த காலை பின்வைக்காத ஜெயஸ்ரீ பிளஸ்டூ வேதியல் தேர்வை எழுத தேர்வு மையத்துக்கு சென்றார். ஜெயஸ்ரீ தேர்வு எழுதும் வரை காத்திருந்த உறவினர்கள், பின்னர் அவரை தந்தையின் இறுதிச்சடங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

இறந்தவருக்காக அழுது புலம்புவதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் தந்தையின் லட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மாணவி பாராட்டுக்குரியவர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெறும் 650 கிராம் எடையில் பிறந்த குழந்தை! போராடிய டாக்டர்கள்! பிறகு நேர்ந்த அற்புதம்!

tamiltips

கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சியான இந்த வடையை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

tamiltips

வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா! முழுமையாக குணமடைய வெந்தய கீரையை சாப்பிடுங்க!

tamiltips

முகத்தில் மினுமினுப்பு பெற கிரீம்கள் எதற்கு? பழங்காலத்து முறை மஞ்சள் ஆவி பற்றி தெரியாத?

tamiltips

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

tamiltips

வலுவான உடல் அடைய தேன் குடிங்க – மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

tamiltips