Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பனீர் தோசை ரொம்ப பிடிக்குமா ? இப்படி செய்து பாருங்கள்!

தோசையில் பனீர் தோசை, ரவா தோசை, அவல் தோசை என 30 க்கும் மேற்பட்ட தோசை வகைகள் உள்ளன். இன்று பனீர் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்,

புழுங்கலரிசி – ஒரு கப்,

துருவிய பனீர் – ஒரு கப்,

Thirukkural

பச்சை மிளகாய் – 2,

உப்பு – தேவைக்கேற்ப,

பொடியாக அரிந்த கொத்துமல்லி – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பனீரை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்துமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்கவைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நட்ட நடுரோட்டில் ரொமான்ஸ்! பைக்கில் காதல் ஜோடியின் சல்லாபம்! வைரல் போட்டோ!

tamiltips

லிச்சி பழம் தெரியுமா? எதுக்காக சாப்பிடணும்?

tamiltips

வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

சாத்துக்குடியில் அப்படி என்னதான் இருக்கு? எந்த நோய் வந்தாலும் அதை குடுக்குறாங்க !!

tamiltips

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை எல்லாம் தேவைதானா?

tamiltips

இரண்டாவது குழந்தை சுமக்கும் பெண்களின் கனிவான கவனத்துக்கு!!

tamiltips