சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது தெரிந்தால் உடனே மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யவேண்டும்.
அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு ஏற்படும். ஆனால் பாத்ரூம் சென்றால் சொட்டுச்சொட்டாக மட்டுமே வரும். இதுவும் உடனே சிகிச்சை அளிக்கவேண்டிய சிக்கல் ஆகும்.
பாக்டீரியா தொற்று ஏற்படுவதை கவனிக்காவிட்டால், கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை ஏற்படலாம்.
அதனால் பாத்ரூம் செல்லும்போது சிறுநீர் சரியான முறையில் கழிகிறதா என்பதையும், வேறு ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதையும் அவதானிக்கவேண்டியது கர்ப்பிணியின் கடமையாகும்.