கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையானது, கை, கால்கள் குறுக்கிக்கொண்டு வெளிவருவதற்கு வசதியாக இருக்கவேண்டும். பிரசவ வலி வந்ததும் குழந்தை தானாக திரும்பி, வெளியே வருவதற்கு வசதியாக தலை கீழே இறங்கவேண்டும்.
குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாக கால், கை அல்லது ஆசனவாய் பகுதி போன்றவை தென்படுவது பிரீச் பொசிஷன் எனப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் குழந்தை தானாக சுற்றிவருவதற்கு காத்திருப்பது பெரும்பாலும் நல்ல பலன் தருவதில்லை.
நீண்ட நேரம் மாறுபட்ட பொசிஷனில் குழந்தை இருப்பதன் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படலாம் என்பதால் சிசேரியன் செய்வதே தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது. சிசேரியனுக்கு வழிவிடும் மேலும் சில காரணங்களை அடுத்து பார்க்கலாம்.