Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென மாயமானது. விசாரணையில் அந்த பேருந்தை இரண்டு பேர் திருடியது தெரியவந்தது.  இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், திருட்டுப் போன பேருந்து மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள, பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில், விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அங்கு சென்ற தெலங்கானா போலீசார், ஐதராபாத்தில் திருடப்பட்ட பேருந்து அங்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு  விற்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.

பேருந்தின் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பழைய இருமபுக் கடையில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடையின் உரிமையாளர்களான முகமது நவீத் மற்றும் அப்சல் கனி மற்றும் கடையின் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பேருந்தை திருடி விற்றது ஐதாராபாத்தை சேர்ந்த, சையது அபேத் மற்றும் சையது ஜிகாத் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

tamiltips

உங்கள் காதலன் உண்மையானவனா? கண்டுபிடிக்க எளிய வழிகள் – காதலர் தின சிறப்புக் கட்டுரை!

tamiltips

மரணத்தை நினைத்து கவலைப்பட கூடாது! சித்தர்களின் அருள்வாக்கு இதோ!

tamiltips

ஆணை விட பெண்ணே வலி தாங்கும் திறனாளி! ஆனால் உங்கள் உடலின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்!

tamiltips

உங்கள் முதுமையை முகத்தில் காட்டாமல் இளமையாக வைத்திருக்க இந்த கீரை பெரிதாக உதவும்!

tamiltips

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்! பிறந்த நாளில் அசர வைத்த வரலட்சுமி!

tamiltips