Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எத்தனை வகை வடை இருந்தாலும் இந்த ரச வடைக்கு தனி ருசிதான்!!!

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – அரை கப்,

உப்பு – ருசிக்கேற்ப,

எண்ணெய் – தேவையான அளவு,

மல்லித்தழை – சிறிதளவு.

Thirukkural

ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் – 2 கப்,

புளித் தண்ணீர் – அரை கப்,

தக்காளி சாறு (வடிகட்டியது) – அரை கப்,

பழுத்த தக்காளி – 1,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – ருசிக்கேற்ப,

பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

பொடிக்க: மிளகு – 1 டீஸ்பூன்,

சீரகம் – 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

கறிவேப்பிலை – சிறிது.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள்.

பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள்.

எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சூடான உணவை சாப்பிட்டு வெந்து போன நாக்கை குணமாக்க சில வழிகள்!

tamiltips

ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் பால்… தாய்ப்பாலுக்கு இணையான பால்… எதுவென தெரியுமா?

tamiltips

இந்துக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச நித்யகர்மங்கள்!

tamiltips

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

tamiltips

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips